விழுப்புரம், நவ.23- விழுப்புரத்தில் திமுக பிரமுகரை கழுத்தை அறுத்து கொலை செய்து உடல் சாலையோர ஓடையில் வீசப்பட்ட சம்பவம் பற்றி காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. 38 வயதாகும் இவர் திமுக 23 வது வார்டு செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். நள்ளிரவில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் ஒரு ஹோட்டல் அருகே உள்ள ஓடையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.அவரது இருசக்கர வாகனமும் அங்கேயே கிடந்தது. காவல்துறை யினர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.